Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

மாதவரத்தில் கட்டுக்கடங்காத தீ –மீட்புப் பணியில் 500 வீரர்ர்கள் !

Advertiesment
மாதவரம்
, ஞாயிறு, 1 மார்ச் 2020 (07:56 IST)
மாதவரம் ரசாயணக் கிடங்கு தீ விபத்துப் பகுதி

மாதவரத்தில் உள்ள ரசாயண கிடங்கில் தீ பற்றியதை அடுத்து அதை அணைக்கும் பணியில் 500 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தீயை அணைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த தீயை அணைக்க முடியாமல் இரண்டாவது நாளாக இன்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இந்த பணியில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ரசாயணக் கிடங்குக்கு அருகில் பெட்ரோல் பங்க் வேறு இருப்பதால் தீ மேலும் பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் திட்டமிட்டபடி சிபிஎஸ்சி தேர்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு