Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

Siva
ஞாயிறு, 16 ஜூன் 2024 (11:26 IST)
ஈரோடு கிழக்கில் நடந்ததுதான் விக்கிரபாண்டி இடைத்தேர்தலில் நடக்கும் என்றும் திமுக தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தும் என்பதால் தான் அதிமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் மதுரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். 
 
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த சில மாதங்களுக்கு முன் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக, நாம் தமிழர் மற்றும் பாமக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. 
 
இது குறித்து விளக்கம் அளித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விக்கிரவாண்டி சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தும் என்றும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அதுபோல விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றும் அதனால் தான் அதிமுக போட்டியிடவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். 
 
Edited bt Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments