Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈசிஆரில் காரில் சென்ற பெண்களிடம் அத்துமீறல்: மொத்தம் 3 பேர் கைது..!

Siva
வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:05 IST)
சென்னை ஈ சி ஆர் சாலையில் காரில் சென்ற பெண்களிடம் அத்துமீறிய சம்பவத்தில் ஏற்கனவே ஒரு கல்லூரி மாணவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து இதுவரை இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை வழிமறித்து இளைஞர்கள் அத்துமீறும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
 
இந்த நிலையில் காரில் இருந்த இளைஞர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகவும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் தேடப்பட்டு வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் நேற்று கிழக்கு தாம்பரம் பகுதியில் காரை போலீசார் கைது செய்தனர்.
 
மேலும்தனியார் கல்லூரி மாணவர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட மூன்று பேர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments