Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷ்மா, அருண்ஜெட்லி விவகாரம்: உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (21:51 IST)
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார். அவரது பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் பேசியபோது மோடியின் டார்ச்சர் காரணமாக தான் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் இறந்தனர் என்று கூறினார் அதன் பிறகு அவர் அதற்கு விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் உதயநிதியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாஜகவினர் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் பரப்புரையின் போது சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண்ஜெட்லி குறித்த பேச்சுக்கு உதயநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments