Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ-சிகரெட் பதுக்கி வைத்து விற்பனை.. சென்னையில் இருவர் கைது..!

Mahendran
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (10:58 IST)
சென்னையில் இ-சிகரெட்  பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசால் இ-சிகரெட்  தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில் இ-சிகரெட்  விற்பனை குறித்து போலீசார் கண்காணிப்பில் இருந்தனர்.

இந்நிலையில் ஆர்கே நகர் நெடுஞ்சாலையில் முகமது ஜப்ருல்லா என்பவர் இ-சிகரெட் விற்பனை செய்து வருவதாக தெரிய வந்தது. இதனை அடுத்து அவரும் அவருடைய கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 476 இ-சிகரெட்  பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் இ-சிகரெட் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி இ-சிகரெட் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் வரலாறு காணாத தாக்குதல்.. ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் காலி..!

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments