டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

Mahendran
புதன், 17 டிசம்பர் 2025 (17:59 IST)
தமிழகம் முழுவதும் டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்ப்பது மிகவும் அவசியமாகும்.
 
வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டிருந்தால், நீக்கப்பட்டதற்கான காரணத்தை அந்தந்த மாவட்டத் தேர்தல் அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். முகவரி மாற்றம், இறப்பு அல்லது இரட்டை பதிவு போன்ற காரணங்களால் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம்.
 
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், தகுதியுள்ள வாக்காளர்கள் படிவம் 6  மூலம் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
 
பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை டிசம்பர் 19 முதல் 2026 ஜனவரி 18 வரை சமர்ப்பிக்கலாம்.
 
இந்த காலக்கட்டத்தில் பெறப்படும் தகுதியான விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, பிப்ரவரி மாதம் வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
எனவே, பொதுமக்கள் வரைவு பட்டியல் வெளியானவுடன் தங்களது விவரங்களை சரிபார்த்து, விடுபட்டிருந்தால் உடனடியாகப் பதிவு செய்வது அவசியமாகும்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

மதுவை முன்பதிவு செய்ய மொபைல் செயலி.. இனி காத்திருக்காமல் மது வாங்கி செல்லலாம்..!

ரசிகர்கள் முன்னிலையில் கபடி வீரர் சுட்டுக்கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்..

புதுவையில் இருப்பது ரேசன் கடையா? அரிசி கடையா? விஜய் சொன்னது சரிதானா? புதுவை மக்கள் சொல்வது என்ன?

ஈரோடு மாநாட்டில் தவெகவில் இணையும் விசிக, அதிமுக மற்றும் திமுக பிரபலங்கள்? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments