பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்காதீர்கள்! காவல் ஆணையர் அறிவுரை!

Prasanth K
செவ்வாய், 4 நவம்பர் 2025 (12:16 IST)

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்க வேண்டாம் என கோவை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

 

நேற்று முன் தினம் கோவை விமான நிலையம் பின்புறம் காரில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை மூவர் சேர்த்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்தனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்த சிலர், அந்த பெண் இரவு நேரத்தில் ஏன் அங்கு சென்றார் என அந்த பெண்ணை குற்றம் சாட்டி பேசினர்.

 

இந்நிலையில் இதுகுறித்து பேசிய கோவை காவல் ஆணையர் சரவண சுந்தர் “பாதிக்கப்பட்ட பெண்ணை யாரும் விமர்சிக்க வேண்டாம். எங்கும் எந்த நேரத்திலும் செல்ல எல்லாருக்கும் உரிமை உள்ளது. தனிமனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்கக்கூடாது.

 

பாதிக்கப்பட்ட பெண் நல்ல உடல்நலத்துடன் உள்ளார். அவருக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!

காபி ரூ.700, தண்ணீர் பாட்டில் ரூ.100.. இப்படி விலை வைத்தால் தியேட்டர்கள் மூடப்படும்: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

குருநானக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இந்தியர்களுக்கு மறுப்பு: பாகிஸ்தான் அடாவடி..!

ஒரே நபர் மீண்டும் மீண்டும் வாக்களித்தபோது, முகவர்கள் ஏன் ஆட்சேபிக்கவில்லை? ராகுல் காந்திக்கு கேள்வி

ஓட்டுனர் உரிமத்துடன் செல்போன் எண்ணை இணைக்க வேண்டும்.. இணைக்காவிட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்