Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஜமான் குடும்பத்தை காப்பாற்ற பாம்புடன் சண்டை போட்ட நாய்: மதுரையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (17:10 IST)
எஜமான் குடும்பத்தை காப்பாற்ற பாம்புடன் சண்டை போட்ட நாய்
தனக்கு சோறு போட்டு காப்பாற்றிய எஜமான் குடும்பத்தின் உயிரை பாம்பிடம் இருந்து பாதுகாக்க தனது உயிரையும் தியாகம் செய்ய முன்வந்த செல்ல நாய் ஒன்றின் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு நாய்கள் என்றால் மிகவும் பிரியம். அவர் தாரா என்ற நாயை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்தார். தாராவும் எஜமான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தது. தாராவை மீறி யாரும் வீட்டிற்குள் செல்ல முடியாது, அப்படி ஒரு விழிப்போடு தாரா இருந்தது
 
இந்த நிலையில் திடீரென தனது எஜமானின் வீட்டிற்குள் ஒரு கட்டுவிரியன் பாம்பு செல்ல முயல்வதை தாரா பார்த்தது. உடனடியாக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த கட்டுவிரியன் பாம்புடன் தாரா சண்டை போட்டது. கட்டுவிரியன், தாராவின் உடலில் பல இடங்களில் கொத்திய போதும் வெறி கொண்டு எழுந்த அந்த நாய் கட்டுவிரியன் பாம்பை கடித்தே கொன்றது
 
தாராவின் சத்தத்தை கேட்டு வெளியே வந்த அந்த வீட்டினர் பாம்பால் கடிபட்டு மயக்கத்தில் இருக்கும் நாயை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அருகில் உள்ள விலங்குகள் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது தாராவின் உடல் விஷம் ஏறி கோமாவுக்கு சென்றுவிட்டதாகவும் முடிந்த அளவு அதன் உயிரை காப்பாற்ற முயற்சித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர் இதனால் அந்த குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments