Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயை விட்டு மாட்டிக்கொண்ட எச்.ராஜா: மண்டை மேல உள்ள கொண்டைய மறந்துட்டோமே!

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (12:36 IST)
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தவறான தகவல் ஒன்றை கூற, அவர் தீக்குளிப்பாரா என திமுக நிர்வாகி ஒருவர் அவருக்கு டுவிட்டரில் சவால் விட்டுள்ளார்.
 
சென்னை 41-வது புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் தமிழன் பிரசன்னா எழுதிய இவன் கருப்பு சிவப்புக்காரன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அவர் புனித நூல்களை குப்பை என பேசியதால் விரட்டப்பட்டார் என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் பாஜகவின் எச்.ராஜா. நடப்பது 41-வது புத்தக கண்காட்சி, ஆனால் எச்.ராஜா 10-வது புத்தக கண்காட்சி என கூறியிருந்தார்.

 
இதனையடுத்து எச்.ராஜாவுக்கு தனது டுவிட்டர் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார் திமுகவின் தமிழன் பிரசன்னா. அதில், எச்.ராஜாவுக்கு சவால் என கூறி, நான் புனித நூல்களை குப்பை என்று பேசியதையும், நீங்கள் குறிப்பிட்டு உள்ளபடி ஏதேனும் நிகழ்வு நடந்ததாக நிருபித்தால் நான் தீக்குளிக்க தயார், இல்லை என்றால் எச்.ராஜா தீக்குளிப்பாரா? என கேள்வி எழுப்பிய அவர் அடைப்புக்குள் நடப்பது 41-வது புத்தகக்கண்காட்சி என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments