Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக எம்.பி., கனிமொழி வீடு திரும்பினார் …

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (15:59 IST)
சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்ட கனிமொழி இன்று வீட்டுக்குத் திரும்பினார்.
 
தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினர்.
 
இந்நிலையில், சமீபத்தில் தூத்துக்குடி தொகுதி எம்பியும், திமுக நிர்வாகியுமான கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார். பாஜக வேட்பாளர் குஷ்பு கனிமொழி குணமடைய வேண்டுமென டுவீட் பதிவிட்டார்.
 
நேற்று மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக கொரோனா பாதுகாப்பு உடையான பிபிசி கிட் அணிந்து வந்து கனிமொழி எம்பி வாக்களித்தார். இப்புகைப்படம் வைரலானது. 
 
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.பி கனிமொழி இன்று வீடு திரும்பினார். அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments