Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து திடீர் நீக்கம்! – துரைமுருகன் அதிரடி!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (08:48 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்ட திமுகவினர் உள்பட 19 பேரை திமுக கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் பலர் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த நிலையில் சிலர் தேர்ந்தெடுக்கப்படாததால் பல பகுதிகளில் சுயேட்சையாகவும் சொந்த கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் கட்சியில் இருந்து கொண்டே சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுபவர், கட்சி வேட்பாளர் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் உள்ளிட்ட 19 பேரை திமுகவிலிருந்து நீக்குவதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த மாதம் ராஜினாமா செய்ய திட்டமிட்டிருந்த விமானி.. அதற்குள் விதி முடிந்தது..!

இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.200 உயர்வு.. தொடர் ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சி..!

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

அடுத்த கட்டுரையில்
Show comments