Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவால் ஒரு பைசாவுக்கும் பிரயோஜனம் இல்லை.. காங்கிரஸ் பிரமுகர் பேச்சால் பரபரப்பு..!

Mahendran
புதன், 24 ஜனவரி 2024 (13:16 IST)
திமுகவால் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பைசா பிரயோஜனம் இல்லை என்றும் ஆனால் திமுக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் தான் காரணமாக இருக்கிறார்கள் என்றும் காங்கிரஸ் பிரமுகர்  அஜோய் குமார் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசனை நடந்த நிலையில் இதில் அஜோய் குமார் , கே.எஸ் அழகிரி மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிக சீட்டுகள் கேட்டு பெற வேண்டும் என்றும்  கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 60 தொகுதிகளில் திமுக வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும் அதை சுட்டிக் காட்டி அதையே தொகுதிகள் பெறப்படும் என்றும் அஜோய்குமார் தெரிவித்தார்

மேலும்  காங்கிரஸ் கட்சி தொண்டர்களையே திமுக போலீஸ் சிறையில் வைக்கிறது என்றும் மோடிக்கு கருப்பு கொடி காட்டினால் திமுகவுக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கூறினார். இருப்பினும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என முதன் முதலில்  திமுக தான் சொன்னது என்பதற்காக அந்த கட்சியிடம்  சமூகமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மொத்தத்தில் இந்த முறை திமுகவிடம் அதிக சீட்டுகள் பெற வேண்டும் என காங்கிரஸ் எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு நான்கு அல்லது ஐந்து சீட்டுகள் மட்டுமே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments