Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடற்கரை செல்ல தடை; மது அருந்தினால் கைது! – டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (12:57 IST)
புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் எந்த கடற்கரையிலும் கூட அனுமதியில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் அறிகுறிகளும், பாதிப்புகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. ஒமிக்ரான் சமூக பரவலாக மாறியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டிற்கு மக்கள் கூட அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் புத்தாண்டு மற்றும் அதற்கு முதல் நாளன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதியில்லை என தெரிவித்துள்ளார். மேலும் கட்டுப்பாட்டை மீறி கடற்கரையில் கூடினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டிசம்பர் 31 அன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யப்படுவதுடன், வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முடிவே இல்லையா? முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

அரசியலில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் எதுவும் கிடையாது: செங்கோட்டையன்

ரூ.5 லட்சம் வரதட்சணை கொடுத்த மணமகள் வீட்டார். ஒரே ஒரு ரூபாய் மட்டும் எடுத்து கொண்ட மணமகன்..!

திருப்பதியில் தங்க ஏடிஎம்.. வெங்கடாஜலபதி டாலரை எளிதில் வாங்கலாம்..!

யூடியூபில் பெண் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ.. விசாரணைக்கு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments