Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தீபாவின் கார் டிரைவர் திடீர் கைது

Advertiesment
deepa
, புதன், 17 ஜனவரி 2018 (05:07 IST)
சமீபத்தில்  எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபா தனது கார் டிரைவரும் கட்சியின் முக்கிய நிர்வாகியுமாக இருந்த ராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். இந்த நிலையில் நேற்று திடீரெனா ராஜாவை மாம்பலம் போலீசார் கைது செய்தனர்

ராஜா கைதான தகவல் அறிந்ததும் தீபா மாம்பலம் காவல்நிலையத்திற்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆட்டோ டிரைவர் ஒருவர் ராஜாவின் காரை உரசிவிட்டதாகவும், இதனால் ராஜா, அந்த ஆட்டோ டிரைவராக அடித்ததாகவும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராஜா கைது செய்யப்பட்டதாக போலீசார் தீபாவிடம் விளக்கினர். இருப்பினும் தொடர்ந்து தீபா போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

கட்சியில் இருந்து நீக்கிய ஒருவருக்காக தீபா ஏன் போலீசாருடன் வாக்குவாதம் செய்கிறார் என்பது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் புரியாத புதிராக இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வைரமுத்துவுக்கு எதிராக உப்பு பேரணி: கோவை பாஜகவினர்களின் விநோத போராட்டம்