எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

Mahendran
வியாழன், 11 டிசம்பர் 2025 (17:50 IST)
வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த நடைமுறையின் கீழ், கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று  முடிவடைய இருந்த காலக்கெடுவை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில் இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை டிசம்பர் 14 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அல்லது வாக்காளர் உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம்.
 
சமர்ப்பிக்கப்பட்ட படிவங்களின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்படும்.
 
டிசம்பர் 14-க்குள் படிவத்தை சமர்ப்பிக்காதவர்களின் பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறாது.
 
வரைவு பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், உரிமைகோரல் காலத்தில் படிவம் 6-ஐ பயன்படுத்தி புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments