Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமழிசை காய்கறி மார்க்கெட்…தினமும் வீணாகும் கய்கறிகள் – காரணம் என்ன?

Webdunia
புதன், 27 மே 2020 (07:23 IST)
திருமழிசை சந்தையில் காயகறிகளை சேமித்து வைக்க கிடங்கு வசதி இல்லாததால் தினசரி காய்கறிகள் வீணாவதாகப் புகார் எழுந்துள்ளது.

கொரோனா ஊரடங்கின் போதும் இயங்கிய கோயம்பேடு காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதனை அடுத்து சமீபத்தில் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டு திருமழிசையில் தற்காலிகமாக கடைகள் அமைக்கப்பட்டன.

அங்கு காய்கறி சந்தை அமைக்கப்பட்டதில் இருந்து காய்கறி வியாபாரம் மந்தமாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அங்கு சேமிப்புக் கிடங்கு வசதியும் இல்லாததால் தினமும் 2 லட்சம் கிலோ காய்கறிகள் வீணாவதாக சொல்லப்படுகிறது. திருமண விழாக்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் எதுவும் ஊரடங்கு காரணமாக தற்போது நடைபெறாததால் காய்கறிகள் தேவை குறைந்துள்ளது. அதனால் வியாபாரமும் மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சவுதி அரேபியால் வெப்ப அலை.. ஹஜ் பயணம் செய்த 19 பேர் பரிதாப பலி..!

கர்வ்ட் ஸ்கிரீன் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் OPPO F27 Pro Plus 5G!

மன்னார்குடியில் பட்டாசு விபத்து: உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணம்.. முதல்வர் உத்தரவு

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

மேற்குவங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.. பலியானோர் எண்ணிக்கை எவ்வளவு? உதவி எண்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்