’எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்? தமிழ் இயக்குனரின் கிண்டல் பதிவு

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (20:32 IST)
’எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?
எங்கள் நாட்டு விவகாரத்தில் தலையிட கொள்ள நீங்கள் யார் என தமிழ் இயக்குனர் ஒருவர் கிண்டலாக தனது வீட்டில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து பாப் பாடகி ரிஹானா உள்பட பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் திடீரென கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் பொங்கி எழுந்து எங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும் இந்தியாவின் இறையாண்மையை நாங்கள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் கூறியிருந்தனர்.
 
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணியில் குல்தீப்பை சேர்க்காதது அபத்தமான முடிவு என்றும் அவரை எப்போது அணியில் சேர்க்க போகிறார்கள்? என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்த கருத்துக்கு கிண்டலுடன் பதிவு செய்த ’தமிழ் படம்’ இயக்குனர் சி.எஸ்.அமுதன், எங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட நீங்கள் யார்? எங்கள் தேசத்தின் இறையாண்மையை ஒருபோதும் நாங்கள் சமரசம் செய்ய விடமாட்டோம்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

அடுத்த கட்டுரையில்
Show comments