Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரொனா கட்டுப்பாடுகள் ஜனவரி 10 வரை நீட்டிப்பு- தமிழக அரசு

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (20:14 IST)
இந்தியாவில் ஏற்கனவே கொரொனா இரண்டாவது அலை பரவல் உள்ள நிலையில், தற்போது, நாடு  முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மாநில அரசுகள் இத்தொற்றைக் குறைக்க  பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. பல மாநிலங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின்  இன்று பிறப்பித்துள்ள உத்தரவில், ஜனவரி 10 ஆம் தேதி வரை துணிக்கடை நகைக்கடை, உடற்பயிற்சிக் கூடங்கள் யோகா பயிற்சி நிலையங்கள், சலூன்களில் 50 %பேருக்கு மட்டுமே அனுமதி ; இறப்பு சார்ந்த  நிகழ்வுகளில் 50 %பேருக்கு மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளார்

மேலும்,மழலையர்-  நர்சரி பள்ளிகளுக்கு அனுமதி இல்லை; 1 ஆம் வகுப்பு  முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை அனுமதி இல்லை;  9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தொடர்ந்து செயல்படும்; மெட்ரோ ரெயில்களில் 50% பெருக்கு மட்டுமே அனுமதி எனவும், . வழிபாட்டுத்தளங்களில் தற்போதுள்ள  வழிகாட்டு நடைமுறையே தொடரும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments