Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சோதனைகளில் குழப்பம் – திருச்சியில் ஆய்வகத்துக்கு சீல்!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (10:30 IST)
திருச்சியில் செயல்பட்டு வந்த கொரோனா சோதனை மையம் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி உறையூரில் டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர் என்ற ஆய்வகம் செயல்பட்டு வந்தது. இதில் கொரோனா சோதனைக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதமும் மேலும் முடிவுகளில் குளறுபடியும் நடந்துள்ளது. கொரோனா இல்லாதவர்களுக்கும் கூட கொரோனா பாஸிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது.

இதனால் அந்த ஆய்வகத்துக்கு கடந்த வாரம் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடந்த விசாரணையில் அந்த ஆய்வக கட்டிடமே மாநகராட்சி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த முழுக் கட்டிடத்தையும் மூடி சீல் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments