Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பள்ளிகள் விளம்பர பலகை வைக்க கூடாது!– அமைச்சர் செங்கோட்டையன்!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (10:17 IST)
தனியார் பள்ளிகள் மதிப்பெண் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் செயல்படாமல் உள்ள நிலையில் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பிற்கு மட்டும் மதிப்பெண் முறையில் அல்லது கிரேடு முறையில் தேர்ச்சி அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளும் வெளியாகின.

இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தனியார் பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பர பலகையாக அமைக்கும் செயல்பாடுகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

மேலும் பள்ளிகள் திறப்பு மற்றும் அட்மிசன் பற்றி பேசிய அவர் “தற்போது தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அட்மிசன் பணிகள் நடைபெறாது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments