Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஸ்ஸி ஆனந்தை வெளியே அனுப்பிவிட்டு நிர்வாகிகளிடம் விஜய் முக்கிய ஆலோசனை.. தவெகவில் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 24 ஜனவரி 2025 (14:38 IST)
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் இருக்கும் நிலையில், அவரை வெளியே அனுப்பிவிட்டு விஜய், கட்சியின் நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்ததாக வெளியாகி உள்ள செய்தி, தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய கூட்டம் இன்று நடந்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விஜய், பொது செயலாளர், புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வெளியே இருக்கச்  செல்லுமாறு அவரை அனுப்பி வைத்தார்.

அதன் பிறகு, தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகளிடம் தனித்தனியாக விஜய் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழகத்தில் பதவி பெறுவதற்கு பணம் கேட்பதாக புகார் எழுந்த நிலையில், இந்த புகார் குறித்து தான் அவர் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் உள்ளிட்டோர் மீதும் புகார் இருக்கிறதா என்பதை அறிவதற்காக தான் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments