Publish Date: Sat, 03 Nov 2018 (18:17 IST)
Updated Date: Sat, 03 Nov 2018 (18:24 IST)
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது என கூறும் இதே நாட்டில் ஆண்களும் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவருக்கு அவரது பள்ளி கம்ப்யூட்டர் டீச்சர் பாலியல் தொல்லை கொடுத்தது வெளியாகியுள்ளது.
மேற்கு முகப்பேரில் உள்ள பிரபல பள்ளியில் +12 படித்து வந்த மாணவனிடம் 40 வயதான ஸ்மிதா என்ற கம்ப்யூட்டர் டீச்சர் பள்ளியிலேயே அத்து மீறி நடந்துள்ளார். இது குறித்து மாணவன் அவனது பெற்றோரிடம் சொல்ல, அவர்கள் பள்ளியில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில், ஆசிரியை ஸ்மிதாவை, பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. ஆனாலும், திருந்தாதா அந்த டீச்சர் மாணவனை செல்போனில் தொடர்பு கொண்டு, ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். டீச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.