Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென தீப்பிடித்து எரிந்த கல்லூரி பேருந்து : பரபரப்பு செய்திகள்

Webdunia
வியாழன், 12 செப்டம்பர் 2019 (18:05 IST)
சென்னை, பெருங்களத்தூர் அருகே நின்றிருந்த தனியார் பேருந்து ஒன்று, திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, பெருங்களத்தூர் அருகே , ஒரு தனியார் கல்லூரி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அதில், திடீரென்று கரும்புகை வெளிவரத் தொடங்கியதால், ஓட்டுநர் விழிப்புடன், பேருந்தை சட்டென நிறுத்திவிட்டு, கிழே இறங்கியதாகத் தெரிகிறது.
 
உடனே பேருந்தின் முன்பக்கப் பகுதியில் இருந்து,குபு குபு என தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனே, இதுகுறித்து, தீயணைப்புத் துறையினருக்குத் தெரிவித்தனர். விரைந்துவந்த  அவர்கள்,  தீயை அணைக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.  மேலும், இந்தப் பேருந்தில் ஓட்டுநரை தவிர யாரும் பயணம் செய்யவில்லை எனத் தகவல் வெளியாகிறது.
 
இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments