Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

Mahendran
சனி, 29 ஜூன் 2024 (15:57 IST)
இனிமேல் கள்ளச்சாராயத்தால் உயிர் பலி ஏற்பட்டால் அதற்கு மாவட்ட காவல் துறை அதிகாரிகள் தான் பொறுப்பு என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பேசிய போது இனிமேல் எங்கேயாவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால் அதற்கு அந்த மாவட்ட காவல்துறை அதிகாரியும் அந்த எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய அதிகாரியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார் 
 
கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு ஆட்சியர்கள் எஸ்பிக்கள் ஆய்வுக்கூட்டத்தில் இது குறித்து கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் இதேபோன்று இனி ஒரு சம்பவம் நடக்க கூடாது என்பதில் தமிழக அரசு மிகவும் கவனமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9 நாட்களில் இடிந்து விழுந்த 5 பாலங்கள்..! பீகாரில் அதிர்ச்சி..!!

காவல்துறைக்கு 100 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தற்போது இல்லை..! அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்..!!

பட்டாசு ஆலை விபத்துகளுக்கு திமுகவின் மெத்தனபோக்கே காரணம்.! டிடிவி தினகரன் காட்டம்..!

தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயமாகின்றன.. சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments