Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை மருந்துக்காக செல்போன் திருட்டு: டிக்டாக்கில் சிக்கிய சிறுவர்கள்!

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (10:52 IST)
சென்னையில் போதை பொருள் வாங்குவதற்காக செல்போன் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் டிக்டாக் வீடியோவால் போலீஸில் சிக்கியுள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு ஐடி ஊழியரை தாக்கி மர்ம கும்பல் ஒன்று செல்போன் திருட்டில் ஈடுபட்டது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் விசாரணையின்போது இதே கும்பல் தி.நகரிலும் செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடிக்க போலீஸார் முயற்சித்து வந்தனர்.

இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சமீபத்தில் டிக்டாக் வீடியோக்கள் வெளியிட்டு உள்ளனர். அதை வைத்து போலீஸார் அந்த கும்பலை பிடித்தது. அதில் இருந்தவர்களெல்லாம் 16, 17 வயதுடைய சிறுவர்கள். போதைக்குய் அடிமையான அவர்கள் போதை பொருட்கள் வாங்குவதற்காக செல்போன் திருட்டில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சிறுவர்களுக்கு போதை பொருட்களை விற்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

ஈரானில் மாயமான 3 இந்தியர்கள்.. ஒரு மாதத்திற்கு பின் உயிருடன் மீட்பு.. என்ன நடந்தது?

1000 கிமீ உள்ளே வந்து அடிச்சிட்டாங்க.. இந்தியா கூட கூறாத தகவலை கூறிய பாகிஸ்தான்..!

அதானி குழுமத்தில் எல்.ஐ.சியின் ரூ.5000 கோடி முதலீடு ஏன்? ராகுல் காந்தி கேள்வி..!

IRCTCயில் 2.5 கோடி போலி கணக்குகள்.. முன்பதிவு செய்து அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments