Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவு கருவாட்டு விற்பனை: 1 கோடிக்கு வியாபாரம்!

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (10:34 IST)
பொங்கல் பண்டிகையயொட்டி கடலூரில் நடைபெற்ற கருவாட்டு சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் வார திங்கட்கிழமைகளில் அதிகாலை 4 மணியளவில் கருவாட்டு சந்தை நடைபெறும். இந்த முறை பொங்கலை முன்னிட்டு நள்ளிரவு 1 மணியளவிலேயே விற்பனையை தொடங்கியுள்ளனர். கருவாடு வாங்க தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களில் இருந்தும் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் அதிகம் வந்துள்ளனர்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் சுணக்கம் கண்டிருந்த கருவாட்டு வியாபாரம் ஜிஎஸ்டி தளர்வுக்கு பிறகு கொஞ்சம் சுறுசுறுப்பு கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். விடிய விடிய நடைபெற்ற வியாபாரத்தில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments