Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியை கொலை செய்து நாடகமாடிய அர்ச்சகர் கைது!

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (12:30 IST)
சென்னை வடபழனி பகுதியில் உள்ள கோயில் அர்ச்சகர் மனைவி கொலை வழக்கில் அவரது கணவர் மற்றும் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
சென்னை வடபழனி பகுதியில் உள்ள சிவன் கோயில் அர்ச்சகரின் மனைவி கடந்த 5ஆம் தேதி தனது வீட்டில் கொலை செய்யப்பட்டார். அவரது கணவர் பாலகணேஷ் கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மர்ம நபர்கள் அவரையும் தனது மனைவியையும் கட்டிபோட்டுவிட்டு 15 பவுன் நகைகளை திருடிச் சென்றதாக பாலகணேஷ் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
 
காவல்துறையினர் தொடர்ந்து விசாராணை நடத்தினர். கண்காணிப்பு கேமராக்களில் பாலகணேஷ் வீடு பக்கம் யாரும் செல்லாதது தெரியவந்தது. இதனால் பாலகணேஷ் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
 
பாலகணேஷ் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பலகணேஷ் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். நாடகமாடிய பாலகணேஷை இந்த வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments