Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கிரிக்கெட் வீரர்களுக்கு ஏதேனும் ஆனால் நாங்கள் பொறுப்பல்ல; வேல்முருகன்

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (12:22 IST)
சென்னையில் தடையை மீறி ஐபிஎல் போட்டி நடைபெற்றால், கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என தமிழக வாழ்விரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை தமிழகத்தில் ஐபிஎல் போட்டி நடத்த அனுமதிக்கக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் ஒருவேளை நாளை தடையை மீறி சென்னையில் போட்டி நடைபெற்றால், மைதானத்திற்கோ கிரிக்கெட் வீரர்களுக்கோ ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சென்னை வந்துள்ள சூப்பர் கிங்ஸ் வீர்ர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கபப்ட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர்கள் தங்கியிருக்கும் ஓட்டலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments