Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை செளகார்பேட்டை கொலை: கைதான மூவர் சிறையில் அடைப்பு!

சென்னை
Webdunia
ஞாயிறு, 15 நவம்பர் 2020 (16:18 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை செய்ததில் அந்த குடும்பத்தின் மருமகள்தான் தனது சகோதரர்கள் உதவியுடன் இந்த கொலையை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 
 
அதுமட்டுமின்றி தனிப்படையினர் மூவரையும் புனேவில் வைத்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் கொலையில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான மூவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரையும் நவம்பர் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது
 
இதனை அடுத்து சென்னை சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments