Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் அனுமதி நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்த 348 பேர் கைது!

சென்னையில் அனுமதி நேரத்தைத் தாண்டி பட்டாசு வெடித்த 348 பேர் கைது!
, ஞாயிறு, 15 நவம்பர் 2020 (11:24 IST)
நேற்று தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

இந்தியா முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசுகள்தான் முதலில் நியாபகத்துக்கும் வரும். ஆனால் பட்டாசுகள் ஏற்படுத்தும் புகையால் ஏற்படும் காற்று மாசுபாடு மக்களுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இதனால் தமிழகத்தில் காலை ஒரு மணி நேரமும், இரவு ஒரு மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இதுபோல அனுமதிக்கப்பட்ட நேரம் அல்லாது மற்ற நேரத்தில் வெடித்த 348 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு 1000 ரூபாய் அபராதமோ அல்லது 6 மாதம் சிறை தண்டனையோ வழங்கப்படும் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடையில் வேலைக்கு சேர்ந்த மைனர் சிறுமி… ஒரே வாரத்தில் மயக்கி திருமணம் செய்த இளைஞர் – இப்போது சிறையில்!