Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் கீழே இறங்கிய தண்டவாளம்: சென்னையில் பரபரப்பு!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (14:34 IST)
கனமழையால் கீழே இறங்கிய தண்டவாளம்: சென்னையில் பரபரப்பு!
தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க தமிழக அரசு மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆனால் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையால் சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருகிறது 
 
அந்த வகையில் தற்போது கனமழை காரணமாக சென்னை ரயில்வே தண்டவாளம் கீழே இறங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி அருகே ரயில்வே தண்டவாளம் திடீரென கீழே இறங்கி உள்ளதாக செய்திகள் வெளிவந்தது 
 
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ரயில்வே துறை அதிகாரிகள் வண்ணாரப்பேட்டை பென்சில் ஃபேக்டரி பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் அந்த பகுதியில்தான் ரயில்வே தண்டவாளம் கீழே இறங்கியதும் கண்டுபிடித்தனர்
 
இதனையடுத்து பாதிப்பை சரி செய்ய ரயில்வே அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்னும் சில நிமிடங்களில் கீழே இறங்கிய ரயில்வே தண்டவாளம் சரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments