சென்னையில் 8 மாடிக் கட்டிடம் வழியாக மெட்ரோ ரயில்.. வெளிநாட்டு பாணியில் அசத்தல் திட்டம்..!

Mahendran
சனி, 4 அக்டோபர் 2025 (16:59 IST)
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சோழிங்கநல்லூரில் ஒரு பிரம்மாண்டமான உயர்மட்ட ரயில் நிலையம் அமைய உள்ளது. இது  மாதவரம் - சிப்காட் மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களும் சந்திக்கும் இணைப்பு முனையமாக செயல்படும்.
 
இந்த நிலையத்தின் நுழைவாயில் அருகே 8 மாடிகளை கொண்ட ஒரு கட்டிடம் கட்டப்படவுள்ளது. ரயில் பாதைகள் இந்த கட்டிடம் வழியாகவே செல்லும் என்பது இதன் சிறப்பு.
 
5-வது வழித்தட நடைமேடை சாலையில் இருந்து 28.8 மீட்டர் உயரத்திலும், 3-வது வழித்தட நடைமேடை 21.8 மீட்டர் உயரத்திலும் அமையவுள்ளது.
 
வெளிநாட்டு பாணியில் அமைய இருக்கும் இந்த நிலையத்தின் வடிவமைப்பு, மேலே இருந்து பார்க்கும்போது இரண்டு வழித்தடங்கள் குறுக்காகக் கடக்கும் பிளஸ் (+) குறியீடு போலக் காட்சியளிக்கும். 8 மாடிக் கட்டிடத்தில் முதல் தளம் வாகன நிறுத்துமிடமாகவும், 6 முதல் 8-வது மாடிகள் வரை மெட்ரோ அலுவலகம், கடைகள் போன்ற வசதிகளுடன் அமையவுள்ளது.
 
சோழிங்கநல்லூர் நிலையம் போலவே, அருகிலுள்ள துரைப்பாக்கம் ரயில் நிலையமும் இதேபோன்ற சிறப்பம்சங்களுடன் கட்டப்படவுள்ளது
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments