Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு வீரர்களின் காயத்தை கண்டுபிடிக்க ஏஐ கருவி: சென்னை ஐஐடி சாதனை..!

Mahendran
புதன், 18 செப்டம்பர் 2024 (13:07 IST)
சென்னை ஐஐடி விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களை கண்டறிய உதவும் ஏ.ஐ ஸ்கேனர் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
 
விளையாட்டு வீரர்களின் காயங்களை துல்லியமாக அறியஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திய அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர் கருவியை சென்னை ஐஐடி விஞ்ஞ்னானிகள் உருவாக்கியுள்ளனர். பேராசிரியர் அருண் கே. திட்டை தலைமையில், ஐஐடி விளையாட்டு அறிவியல் மற்றும் ஆய்வு சிறப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர் குழு இந்த ஸ்கேனர் கருவியை கண்டுபிடித்துள்ளது.
 
எளிதில் வெளியே எடுத்துச் செல்லக்கூடிய இந்த கருவி மூலம் விளையாட்டு வீரர்களின் காயங்களை மட்டுமின்றி, காயத்தின் தாக்கம் எவ்வளவு பரவியுள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 
 
மேலும், காயமடைந்த வீரரை தொடர்ந்து விளையாட அனுமதிக்கலாமா அல்லது உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற அனுப்ப வேண்டுமா என்பதையும் உடனடியாக தீர்மானிக்க முடியும். 
 
முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்கேனர் கருவி, விளையாட்டு வீரர்களின் பாதுகாப்புக்கு முக்கிய சாதனமாக இருக்கும் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாதங்களில் ரூ.10,000 கோடி வருமானம்.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு கொட்டும் லாபம்..!

எங்கும், எப்போதும் அலட்சியம்.. விடியா திமுக அரசுக்கு எனது கண்டனம்.. ஈபிஎஸ்

நடுநிலை விசாரணைக்கு தயார்.. கடும் நெருக்கடியால் இறங்கி வந்த பாகிஸ்தான் அரசு.

சிந்து நதிநீரை நிறுத்தி எங்கே தேக்கி வைப்பீர்கள்? மத்திய அரசுக்கு ஒவைசி கேள்வி..!

அபிநந்தன் கழுத்தை அறுத்துவிடுவேன்: பாகிஸ்தான் கர்னல் செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments