Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

Siva
ஞாயிறு, 24 நவம்பர் 2024 (09:57 IST)
இன்று முதல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் பின் வருமாறு:
 
சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில் சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி நடப்பதால், மின்சார ரயில் சேவையில் இன்று முதல் அதாவது நவம்பர் 24 முதல் 28-ம் தேதி வரை மாற்றம் செய்யப்படுகிறது. 
 
சென்னை கடற்கரையில் இருந்து இன்று முற்பகல் 11.50, நண்பகல் 12.30, 12.50, மதியம் 1.45, இரவு 9.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். 
 
அதேபோல, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று மதியம் 1.50, பிற்பகல் 2.25, 3.05, மாலை 4.05, இரவு 11.00 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும்.
 
சென்னை கடற்கரையில் இருந்து நவம்பர் 25 முதல் 28-ம் தேதி வரை முற்பகல் 11.40, நண்பகல் 12.28, 12.40, மதியம் 1.45, இரவு 9.25 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்ல வேண்டிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். 
 
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு நவம்பர் 25 முதல் 28-ம் தேதி வரை மதியம் 1.45, பிற்பகல் 2.20, 3.05, மாலை 4.20, இரவு 11.00 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் 
 
இவ்வாறு சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments