Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!!

Webdunia
புதன், 6 மே 2020 (16:07 IST)
தமிழத்திலும் சென்னை தவிர பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதோடு அரசு மாதுபானங்களின் விலையை ரூ.20 உயர்த்தியுள்ளது. சாதாரண 180 மிலி மதுபானங்கள் அடக்க விலையோடு ரூ.10 அதிகமாகவும், நடுத்தர மற்றும் ப்ரீமியம் பானங்கள் ரூ.20 அதிகமாகவும் விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது டாஸ்மாகில் மது வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்,, டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து , உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவித்துள்ளதாவது :

தமிழகத்தில் கொரோனாவைரஸ் தாக்கம் முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது.

மதுக்கடைகளில் சமூக விலகல் பின்பற்றப்படும். அதேசமயம் மக்களுக்குப் பாதுகாப்பும் வழங்கப்படும் .மது மொத்த விற்பனை செய்யப்படாது. தனிநபர்களுக்கு மட்டும் தான் விற்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள  மனுக்கள் மீது இன்று மாலை 5 மணிக்கு தீர்ப்பு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments