Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நினைச்சதை விட ஸ்பீடா இருக்கே.. இன்றே கரையை கடக்கும் புரெவி!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (15:47 IST)
வங்க கடலில் உருவான புரெவி புயல் வேகமாக நகர்ந்து வருவதால் இன்று இரவே இலங்கையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறி தென் தமிழக நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் இலங்கையை கட்ந்த பின்னர் மன்னார் வளைகுடா வழியாக நாளை பாம்பன் – கன்னியாக்குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் முன்னதாக 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த புயல் தற்போது மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று மாலையிலிருந்து இரவுக்குள்ளாக இலங்கையின் திரிகோண மலைக்கு வடக்கே கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை மற்றும் தென் தமிழக பகுதிகளில் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் அதி கனமழையும், சூறைக்காற்றும் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments