Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு! – அறிவிப்பால் மீனவர்கள் அதிர்ச்சி!

கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்கு! – அறிவிப்பால் மீனவர்கள் அதிர்ச்சி!
, புதன், 2 டிசம்பர் 2020 (11:03 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்குப்பதியப்படும் என அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக மாறி தென் தமிழக நோக்கி நகர்ந்து வருகிறது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல் நாளை பாம்பன் – கன்னியாக்குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென் தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் குமரியில் கடலுக்குள் சென்ற மீனவர்களை திரும்ப வரவும் உத்தரவிடப்பட்டது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக 1000க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்குள் சென்றிருந்த நிலையில் 700க்கும் அதிகமான மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் குளச்சல் பகுதியில் புயல் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும், கரை திரும்பாத மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறுதலாக அப்படி அறிவிக்கப்பட்டதா என்ற குழப்பம் நிலவியுள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விருது தறோம் வாங்க; ஆசைக்காட்டி தொழிலதிபர் கடத்தல்! – ஸ்கெட்ச் போட்ட போலீஸ்!