Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொசைட்டி பாலின் சர்க்கரை தண்ணீரை கலந்து மோசடி! – கூட்டுறவு செயலாளர் மோசடி அம்பலம்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (15:20 IST)
திருவண்ணாமலையில் ஆவின் நிறுவனத்துக்கு கொண்டு செல்லும் பால் கேன்களில் கூட்டுறவு செயலாளர் சர்க்கரை தண்ணீரை கலந்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சாவல்பூண்டி ஊராட்சி பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளராக உள்ளவர் புஷ்பநாதன். பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு தனி கட்டிடம் இல்லாததால் புஷ்பநாதன் தனது கடையில் வைத்து முகவர்களிடம் இருந்து பாலை வாங்கி ஆவின் நிறுவனத்திற்கு அனுப்பி வருகிறார்.

இந்நிலையில் முகவர்களிடம் இருந்து வாங்கும் பாலில் கேனுக்கு 4 லிட்டர் வரை புஷ்பநாதன் எடுத்து விட்டு அதற்கு பதிலாக சர்க்கரை தண்ணீரை கலந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு பால் கொண்டு செல்லும் ஓட்டுநரும் இதற்கு உடந்தை என்றும் நாள் ஒன்றுக்கு 120 லிட்டர் வரை இவ்வாறு மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில், புஷ்பநாதன் பாலில் சர்க்கரை தண்ணீர் கலக்கும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதா? சரமாரி கேள்வி..!

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையா? அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

காக்கிச் சட்டை போட்ட எமனுக: அஜித்குமார் மரணம் குறித்து நடிகர் தாடி பாலாஜி..!

அரசாங்கம் கொலை செய்தால் ஏன் கொலை வழக்காக பதிவு செய்வதில்லை: மனித உரிமை செயல்பாட்டாளர் கேள்வி

சிவகங்கை அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காவலர்கள்! அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments