Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன்.. மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் பெற்றோர்...!

Mahendran
புதன், 11 செப்டம்பர் 2024 (12:19 IST)
திண்டுக்கல் அருகே 11 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்த நிலையில் அந்த சிறுவனின் பெற்றோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 11 வயது சிறுவன் கிஷோர் என்பவர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மூளை சாவு அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது மகனின் நிலை காரணமாக மீள முடியாத துயரத்தில் இருந்த போதிலும் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அந்த சிறுவனின் பெற்றோர் முன்வந்துள்ளனர்.

இதனை அடுத்து சிறுவனின் உடல் உறுப்புகள் திண்டுக்கல் அரசு மருத்துவர் கல்லூரி மருத்துவமனையில் தானமாக அளிக்கப்பட்டது. கிஷோரின் தந்தை பழனிச்சாமி ஒட்டன்சத்திரத்தில் காவல் நிலையத்தில் காவலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments