Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (12:27 IST)
கர்நாடகம் மாநிலத்தில் உள்ள 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி  நடந்து வருகிறது.
 
இங்கு பெங்களூரில் உள்ள 15 பள்ளிகளுக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  அதாவது, இமெயில் மூலம் மர்ம நபர் இப்பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 
 
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
 
விரைந்து பள்ளிக் கூடத்திற்குச் சென்ற போலீஸார் பள்ளியில் இருந்து  மாணவ, மாணவியரை வெளியேற்றி, சோதனை நடத்தினர்.  
 
இச்சோதனையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என கண்டுபிடித்தனர்.
 
மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்று  அம்மாநில துணை முதல்வர்  டி.கே.சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெறும் மூவர்.. பிரிட்டன், அமெரிக்கர்கள்..!

நாளை 3 மாவட்டங்களில் அதிகனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

உத்தவ் தாக்கரே மருத்துவமனையில் அனுமதி.. சிவசேனா தொண்டர்கள் அதிர்ச்சி..!

பள்ளி கல்வித்துறை நடத்தும் பொதுத்தேர்வு அட்டவணையை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்!

மத்திய அரசின் கோரிக்கையை மாநில அரசு நிறைவேற்றினால் கல்விக்கான நிதியை விடுவிக்கும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

அடுத்த கட்டுரையில்
Show comments