பெங்களூரில் 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (12:27 IST)
கர்நாடகம் மாநிலத்தில் உள்ள 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடகம் மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி  நடந்து வருகிறது.
 
இங்கு பெங்களூரில் உள்ள 15 பள்ளிகளுக்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.  அதாவது, இமெயில் மூலம் மர்ம நபர் இப்பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். 
 
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.
 
விரைந்து பள்ளிக் கூடத்திற்குச் சென்ற போலீஸார் பள்ளியில் இருந்து  மாணவ, மாணவியரை வெளியேற்றி, சோதனை நடத்தினர்.  
 
இச்சோதனையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என கண்டுபிடித்தனர்.
 
மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்று  அம்மாநில துணை முதல்வர்  டி.கே.சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments