Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை 1100 இடங்களிலும் பாஜக ஆர்ப்பாட்டம் – ஏன்?

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (10:34 IST)
நாளை பால் விலை உயர்வை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.


ஆவினின் ப்ரீமியம் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்துவதாக ஆவின் அறிவித்தது. இதனால் ஆவின் ஆரஞ்சு நிற ப்ரீமியம் கொழுப்புசத்து நிறைந்த பால் பாக்கெட் ஒரு லிட்டரின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.

ஆனால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.46க்கு விலை மாற்றமின்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அட்டைதாரர்களாக இல்லாத மற்ற வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பால் விலை உயர்வை கண்டித்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி 15 ஆம் தேதி மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று முன்னதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை  அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. நாளை 1100 இடங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments