வெளுத்த கனமழை; 45 ஆயிரம் ஹெக்டேர் பயிர்கள் மூழ்கியது! – அமைச்சர் தகவல்!

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (09:57 IST)
தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வருவாய்துறை அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் பல மாவட்டங்களில் மழைவெள்ளத்தால் குடியிருப்பு பகுதிகள் மூழ்கியதுடன், வேளாண் நிலங்களும் சேதமடைந்தன.

மழை பாதிப்புகள் குறித்து தற்போது தமிழக வருவாய்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள தகவல்களின்படி “நேற்று முன்தினம் பெய்த மழையால் இருவர் உயிரிழந்துள்ளனர். 83 கால்நடைகள் இறந்துள்ள நிலையில், 538 வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும், கால்நடைகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் பெய்த கனமழையால் 45,826 ஹெக்டேர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments