ஈரோடு கிழக்கு தொகுதியில் பணநாயகம் தான் வெல்லும்: பாஜக எம்.எல்.ஏ கருத்து..!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (15:19 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் பணநாயகம் தான் வெல்லும்: பாஜக எம்.எல்.ஏ கருத்து..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது பணநாயகம் வெற்றி பெற்றதாகத்தான் அர்த்தம் என பாஜக எம்எல்ஏ சரஸ்வதி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள சிஎஸ்ஐ பள்ளியில் இன்று  மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி வாக்களித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களின் பேசிய போது 'ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பணநாயகம் வென்றதாகவே கருதப்படும் என்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். பணம் அளிக்காமல் வாக்களிப்பதற்கான மனநிலைக்கு மக்கள் மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்களை திமுகவினர் கொடுப்பதாக அதிமுகவினர் குற்றம் தாண்டி வரும் நிலையில் அதிமுகவினர்களும் பணம் கொடுப்பதாக ஒரு சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது
 
இதனை அடுத்து யார் வெற்றி பெற்றாலும் அங்கு பணநாயகம் வென்றதாக கருதப்படும் என மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments