Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் பஸ் நிலையத்திற்கு மீனாட்சியம்மன் பெயர்: பாஜக கோரிக்கை

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (19:54 IST)
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பெயர் வைக்க வேண்டுமென்றும் அதேபோல் வைகை பாலத்திற்கு பசும்பொன் தேவர் பெயர் வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
கடந்த பல ஆண்டுகளாக மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் என்ற பெயரில் இயங்கி வரும் நிலையில் இந்த பெயருக்கு மீனாட்சி அம்மன் பெயர் வைக்க வேண்டுமென பாஜக உள்ளிட்ட சில அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன
 
அதேபோல் மதுரையில் உள்ள வைகை மேம்பாலத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன
 
இந்த இரு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு பாஜகவினர் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் பெரியார் பெயரை திமுக அரசு மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments