Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி - பழனியில் பரபரப்பு

Webdunia
புதன், 21 மார்ச் 2018 (16:00 IST)
அதிமுக கொடி கம்பத்தில் பாஜக கொடி ஏற்றப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஜெ.வின் மறைவிற்கு பின் தமிழகர் முதல்வர் பதவி ஓ.பி.எஸ்-க்கு சென்றது. அதன் அவரை ராஜினாமா செய்ய வைத்த சசிகலா, அந்த பதவிக்கு ஆசைப்பட்டார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறைக்கு செல்ல, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார்.
 
ஆனால், ஆளும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு பாஜகவிற்கு அடிபணிந்து செயல்படுகிறது என்கிற கருத்தை திமுக உள்ளிட்ட பல கட்சிகளும் கூறி வருகின்றனர். ஆனால், அதை எடப்பாடி-ஓபிஎஸ் தொடர்ந்து மறுத்து வருகிறது.
 
இந்நிலையில், பழனி அருகே மானூரில் அதிமுக கொடி கம்பத்தில் பாஜகவின் கொடி ஏற்றப்பட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் இன்று வெளியானது.
 
இதன் மூலம் தமிழகத்தில் பாஜக ஆட்சிதான்  நடைபெறுகிறது என்பது உறுதியாகியுள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments