Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவடி சித்த மருத்துவர் கொலை.. மனைவியிடம் தவறாக நடந்ததால் கொலையா?

Mahendran
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (13:27 IST)
ஆவடி சித்த மருத்துவர் சிவன் நாயர், மனைவி கொலை வழக்கில் கைதான வடமாநில நபர் மகேஷ் தன் மனைவியிடம் தவறாக நடந்ததால் இனி வீட்டிற்கு வர வேண்டாம் என மருத்துவர் எச்சரித்தது விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. மேலும் மகேஷ், சித்த மருத்துவரிடம் மன அழுத்த சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
ஆவடி சித்த மருத்துவர் சிவன் நாயர் மனைவியிடம் மகேஷ் தவறாக நடந்ததாகவும், இதற்கு சித்த மருத்துவர் எச்சரித்த போதிலும் மீண்டும் வந்து மனைவியிடம் அத்துமீற முயன்ற தகராறில் இருவரையும் மகேஷ் கொலை செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் மகேஷின் போனை கைப்பற்றி போலீசார் விசாரித்ததில் ஆபாச உரையாடல்கள் இருந்ததும் ஏராளமான பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
முன்னதாக சித்த மருத்துவரிடம் மருத்துவம் பார்க்க வந்த அனைவரிடமும் விசாரணை நடந்து வருவதாகவும் பணம் மற்றும் நகைக்காக இந்த கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது விசாரணையில் மகேஷிடம் போலீசார் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டாயப்படுத்தி, மிரட்டி கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை! - தமிழக அரசு அதிரடி!

4 மண்டலங்களில் பூத் கமிட்டி மாநாடு.. 234 தொகுதிகளில் சுற்று பயணம்! - வேற லெவல் ப்ளானில் விஜய்!

மே 1 முதல் ஏடிஎம் கார்டு கட்டணம் அதிகரிப்பு.. வங்கி பயனாளர்கள் அதிர்ச்சி

ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூட உத்தரவு – உளவுத்துறை எச்சரிக்கை

3வது குழந்தை பெற்று கொண்டால் அரசு சலுகை: திமுக எம்.எல்.ஏ கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments