Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச்சூடு.. அதிரடிப்படை பதில் தாக்குதல்..!

Mahendran
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (13:21 IST)
ராகுல் காந்தி போட்டியிடும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மாவோயிஸ்டுகள், அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாக வ் வெளியாகிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழர்கள் வசிக்கும் கம்பமலை பகுதியில் மொய்தீன் தலைமையிலான மாவோயிஸ்டுகள் 2 மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிரடிப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், அதிரடி படையினர் மற்றும் மாவோயிஸ்டுகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் இல்லை எனவும் ஒரு கட்டத்தில் வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் தப்பியோடி விட்டதாகவும் தெரிகிறது. தப்பியோடிய மாவோயிஸ்டுகளை கம்பமலை பகுதியில் அதிரடிப் படையினர் தேடி வருகின்றனர்.
 
இதே பகுதியில், தேர்தலுக்கு 2 நாள் முன்பாக வாக்களிக்க வேண்டாம் என துப்பாக்கியுடன் மாவோயிஸ்டுகள் மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தேர்தலில் போட்டியிட சீட்.. டாக்டர் ராமதாஸ்

2 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பாய் ஃப்ரெண்டை பழிவாங்க 21 வெடிக்குண்டு மிரட்டல்!? - சென்னை ஐடி பெண் ஊழியர் அதிரடி கைது!

3 இஸ்ரேலியர்களுக்கு மரண தண்டனை.. இன்று தூக்கிலிடப்பட்டு நிறைவேற்றிய ஈரான்..!

திடீரென 80 அடிக்கு உள்வாங்கியுள்ள திருச்செந்தூர் கடல்.. ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கும் பக்தர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments