கடிதத்தை பொதுவெளியில் விடுவது சரியான செயலா? – ஆளுனருக்கு சபாநாயகர் கேள்வி!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (10:34 IST)
நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியது குறித்து விளக்க கடிதத்தை பொதுவெளியில் பகிர்வது சரியா என சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுனர் ஆர்.என்.ரவி அதை மீண்டும் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான மசோதா இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படுகிறது. மருத்துவ மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்துள்ளார். முன்னதாக பேசிய சபாநயகர் அப்பாவு, நீட் தேர்வு விலக்கு மசோதாவை திரும்ப அனுப்பியது குறித்த கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது சரியான செயலா என ஆளுனருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை எந்த ஆளுனரும் இதை செய்ததில்லை என்றும் அவர் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments