Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமூகநீதி கூட்டமைப்புக்கு ஆதரவு! – மெகபூபா முப்தி கடிதம்!

சமூகநீதி கூட்டமைப்புக்கு ஆதரவு! – மெகபூபா முப்தி கடிதம்!
, செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (08:45 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்கும் சமூகநீதி கூட்டமைப்பிற்கு ஆதரவு அளிப்பதாக மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு என்னும் கட்சிகளின் கூட்டமைப்பை தொடங்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த கூட்டமைப்பில் இணையுமாறு இந்திய தேசிய காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், அதிமுக, பாமக உள்ளிட்ட 34 அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதினார்.

இந்நிலையில் இந்த கூட்டமைப்பில் இணைவதாக முன்னதாக இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்தார், அவரை தொடர்ந்து சமூகநீதி கூட்டமைப்புக்கு ஆதரவு அளிப்பதாக ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள விரிவான கடிதத்தையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்டோ சின்னத்தை தட்டித்தூக்கிய விஜய் மக்கள் இயக்க வேட்பாளர்கள்