மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற கூட்டத்தொடர்: முதல்வர் ஆலோசனை!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (07:07 IST)
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கலைவாணர் அரங்கில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தற்போது கொரனோ வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டதை அடுத்து இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதால் மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன
 
ஜனவரி 5ஆம் தேதி முதல் கவர்னர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பார்வை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments